Thursday, December 12, 2013

நீண்டுகொண்டு சென்ற பயணத்தில் கருப்புக்கோடிட்டு....



நீண்ட நாட்களுக்கு பிறகு வேலைகலற்று நுழைகிறேன் இத்தளத்தில்,தனிமை முழுதாய் அரித்து கொன்றுவிடுவதற்குள் இடம் நகர வேண்டும் அல்லவா ஆதாலால்.

இங்கு நுழைவதற்கும் கொஞ்சம் அச்சம் தான்,ஆமாம் தொடக்க பள்ளியில் தொலைந்துபோன நண்பனை கண்டெடுக்க இங்கே நுழைந்த நான், இன்னொரு தொடக்கப்பள்ளி நண்பனை எதிர்பார்த்துகொண்டிருக்கிறேன் என்னை கண்டெடுக்க இத்தளத்திலிருந்து.

உடல் முழுவதும் புலம்பெயரும் குருதியின் ஏதோ ஒரு நுனியில் ஒட்டிக்கொண்டிருக்கும் எழுத்து தாகம்,அவ்வப்போது எழுதத்தூண்டுவதுண்டு, எழுதிபோட்டுவிட ஆயிரம் இருக்கிறது அத்தனையும் முடித்துவிடவேண்டிய தாகம், முடிக்க இயலா ,எண்ணங்கள் தாக்கும் நொடியில் தீர்ந்துவிடுகிறது தாகம்.

தீர்ந்த நொடியில் பக்குவமாய் வீட்டைபூட்டிவிட்டு,நகர்ந்து என்னை உயிர்பித்து கொள்கிறேன்.இலக்கில்லா பயணமும் அழகுதான் மனம்முழுவதும் வெற்றிடமாய் பரவிக்கிடக்கும் நேரங்களில். என் பாதமும்,பாதையும் முத்தமிடும் தருணங்களை தடுக்கும் மிதியடிகளை என்னுடன் ஒட்டிக்கொண்டு உறவாட அனுமதிப்பதில்லை இத்தகைய இலக்கில்லா அழகிய பயணங்களில்.

காற்றுப்பூகாத மிதியடிகளில் வாரங்கள் முழுவதும் சிறைபற்றிருக்கும் என் பாதங்களும் கூட விரும்புவதில்லை அவைகளை. அந்திவானம் அத்தனை அழகு என்று எத்தனை கவிஞர்கள் பாடியவை என்னுள் நுழையும் பொழுதெல்லாம் அறியாதவை இப்பொழுது உணரப்படுகிறது இப்பயணத்தில்.

இப்பொழுது தான் நடை பழகியவனை போல் ஒவ்வொரு அடியும் நிதானமாய்,ஒவ்வொரு பார்வையிலும் தெளிவான காட்சிகள்.அவசர அவசரமாய் வேலை முடித்துவிட்டு அழுதுகொண்டு இருக்கும் உறவுகளை கையில் ஏந்தி முத்தமிட ஏங்கும் உடைகளில் ஏழ்மை காட்டும்,அன்பில் உச்சம் காட்டும் என் தாயின் சாயல்கள்.

வேகமாய் உருளும் மிதிவண்டியின் சக்கரத்தோடு புன்னகையையும் உருளச்செய்யும் வயதின் எண்ணிக்கையை இப்பொழுது தான் தொடங்கும் பிஞ்சுகள்.

என்னைப்போன்று தற்காலிக தனிமை இல்லாமால்,நிரந்திரமாய் தனிமையை சுவாசிக்கும், வயதின் எண்ணிக்கையை முடிக்கவிருக்கும் விழுதுகளை சுமக்கும் நடைகளில் தனிமையை தவிக்க விட்டதாய் எண்ணிக்கொள்ளும் வயதானவர்களின் மாலை நேரநடைகள் ஆழமாய் கண்களில் பதிகின்றன.இன்னும் சிலகாலங்கலே என மனதில் கணக்கை போட்டுவிட்டு எட்டி நகர்கிறது கண்கள்.

அழகாய் மணிசத்தம்,சத்தம் நிறைந்த இடத்தில் அமைதியை தேடி சில நகரல்கள்.என் முன்னோர்கள் அமைதியை தேட அழகாய் செதுக்கிய தெய்வசிலைகள், அமைதியை ரசிக்கும் தெருமுற்றத்து கம்பீர கோவில்களில் சில நின்றுகொண்டும், சில அமர்ந்துகொண்டும், சில படுத்துக்கொண்டும்.

வாசற்படியில் வயிற்றை நிரப்பிக்கொள்ள தவிக்கும்,பார்வை மங்கிய நிலையிலும் பதுமானமாய் கட்டிய மல்லிகையை ஏந்திக்கொண்டு உளைப்பைகற்றுதரும் என் பாட்டியின் சாயல்கள்.

நீண்டுகொண்டு சென்ற பயணத்தில் கருப்புக்கோடிட்டு தடுத்து நிறுத்திய இரவை மன்னித்துவிட்டு வீடுதிரும்பி,வீட்டை தாளிட்டு,நகரல்களை நான்குசுவற்றில் சுருக்கிக்கொண்டு,மெல்ல அமர்ந்து,தனிமையுடன் எனக்கு தெரிந்த மொழிகளில் இருவரும் உரையாடிக்கொண்டேகணிப்பொறியை திறந்து மெல்ல தட்ட ஆரம்பிகிறேன் www.facebook.com என, மீண்டும் தொலைந்துபோக :(

0 comments:

Post a Comment