Tuesday, November 20, 2012

மொழியில்லா உணர்வுகள்...


 


மொழி கண்டறியப்படா சத்தங்களுக்கு இங்கே வெறும் உணர்வுகளை மட்டும் வைத்து எழுத்தாய் உதிர்த்திருக்கிறேன் - விஜய்

%&*^$&^*(**^%@#$@#$#$@#$$#%$#%$# !@$%^*)^%^&^@%#$!&%^(*)(_(*(^&#%@##$!$@^%^*(&*)&)FG*^&#%@#>^(^(*(^(^( %&*^$&^*(**^%@#$@#$#$@#$$#%$#%$# !@$%^*)^%^&^@%#$!&%^(*)(_(*(^&#%@##$!$@^%^*(&*)&)FG*^&#%@#>^(^(*(^(^( %&*^$&^*(**^%@#$@#$#$@#$$#%$#%$# !@$%^*)^%^&^@%#$!&%^(*)(_(*(^&#%@##$!$@^%^*(&*)&)FG*^&#%@#>^(^(*(^(^( %&*^$&^*(**^%@#$@#$#$@#$$#%$#%$# !@$%^*)^%^&^@%#$!&%^(*)(_(*(^&#%@##$!$@^%^*(&*)&)FG*^&#%@#>^(^(*(^(^(
- 15-Nov-2012, 11.05 pm - மொழி தெரியா உயிர்


என்னைப்பற்றி சொல்வதற்கு முன் நான் இருக்கும் நிலையை கூறியே ஆகவேண்டும்.நிஜமாய் முற்றிலும் புதிய சூழல்,எல்லைகள் வகுத்து ஒடுக்கிவைக்கப்பட்டு இருந்த நான் இப்பொழுது எல்லைகளற்று விரிந்துவிடப்பட்டு இருக்கிறேன்,மிகவும் பத்திரமாய் இருப்பதாய் நினைத்து பெருமைப்பட்ட மிக நீண்ட மாதங்களை ஓரிரு நிமிடத்தில் உடைத்தெறிந்து பிரிக்கப்பட்டு இருக்கிறேன் இப்பொழுது,மெல்லிய காற்றும் கூட என்னை காயப்படுத்தும் நிலையில் இருக்கிறேன்.


பேசத்தேவையில்லை,அழத்தேவையில்லை என் தேவைகளுக்காய் எப்பொழுதும் என எண்ணிய நிமிடங்களுக்காய் இப்பொழுது வெட்கி தலைகுனிகிறேன்.


சற்று நேரத்திற்கு முன்பு தான் இவைகள் நடந்தன,சுதந்திரம்,காற்றும் கூட என் தேகத்தை கிழிக்க ஆரம்பிக்கும் நிகழ்வுகள்,என் தேவைகளுக்காய் அழுதே ஆகவேண்டிய கட்டாய சூழல்கள்,ஒரே சத்தம் மட்டும் என்னுள் விழும் தருணங்கள் கடந்து ஆயிரம் சத்தங்கள் என்னைதொடும் தருணங்கள்.என்னை சுற்றி ஒவ்வொன்றாய் உருவங்கள் தோன்றி மறைகின்றன, ஒவ்வொரு உருவங்களும் சரிவர தெரியாமல் திணறும் என் கண்ணருகே வந்து வந்து மறைகின்றன.


இதுவரை பத்திரமாய் பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்த இடம் எங்கே? என்ற கேள்விகளை எண்ணத்தொடங்கும் நிமிடத்தில் இவைகள் அரங்கேறின.சற்று நிமிடத்தில் என்னருகே இன்னொரு உருவம் கிடத்திவைக்கப்பட்டிருந்தது. கண்களை சுழற்றி காண முயற்சி செய்யும் முன்பே அறிந்துகொண்டேன்,நான் தேடிய இடமும்,என்னை தாங்கிய உயிரின் அதே சுவாச வாசம் அறிந்துகொள்ள முடிகிறது சந்தேகம் இல்லாமல்,உணர்ந்த அந்த நொடியில் என் முதன்மை உயிரிடம் என் அசௌகரியங்களை எடுத்துவைக்கிறேன் என் அழுகையால்,அடுத்த நிமிடம் என் மீது கரங்களை வைத்து "சரி சரி செல்லம் ஒன்னும் இல்ல அம்மா நான் இருக்கிறேன்" என்ற வார்த்தைகளும் உணர்வுகளும் என்மீது விழுந்து என்னை பாதுகாக்கின்றன.


இப்பொழுது என் முதன்மை உயிருக்கு பெயரும் வைத்துக்கொண்டேன் "அம்மா" என்று.எனக்கும் என் அம்மாவுக்குமான உணர்வு பரிமாற்றங்கள் நிகழும் இத்தருணத்தில் சில நூறு உருவங்கள் மறைந்தும், தோன்றியும் இருந்தன, என் இன்னுமொரு பக்கம் இன்னுமொரு உருவம் மறையாமல் அப்படியே என் பிம்பத்தில் இருந்து விலகாமல் இருந்தது,அவ்வப்பொழுது என்னை உற்று தொட்டுக்கொண்டே இருந்தது, ஒவ்வொரு தொடுதலும் அழுத்தமாய்.அழுத்தம் ஒவ்வொன்றும் என்னுள் அசௌகரியத்தை ஏற்படுத்துவதை என் அம்மாவிடம் அழுகையில் தெரிவிக்கிறேன்.


என் மீது விழும் விரலை தட்டிவிட்டுகொண்டிருக்கிறேன்.அனைத்து உருவங்களும் மறைந்து சௌகரியம் ஏற்படுத்திய போதும் மறையா அதே உருவத்தால் என் அழுகையின் சத்தத்தை அதிகப்படுத்துகிறேன்.இப்பொழுது விரல் விழும் நிகழ்வு நடக்கவில்லை.மெதுவாய் அழுகையை நிறுத்துகிறேன்,இப்பொழுது என்னை சுற்றி அதே உருவம் மட்டும் மறையாமல் ஓரமாய்.


சில நிமிடங்களில் என் அம்மா அறிமுகப்படுத்துகிறாள் "அப்பா பாரு,அப்பா பாரு ,உன் அப்பா பாரு...உன் அப்பா செல்லம்,இனி என்ன வேணும்னாலும் அப்பாகிட்ட கேளு,வாங்கித்தருவார்,நமக்கு எல்லாம் அவர் தான்.அப்பா பாரு, அப்பா பாரு" என என் அம்மா கூறிய அடுத்த நிமிடமே வெட்கிபோய்விட்டேன். மன்னித்துவிட சொல்லி அழுகிறேன், அழத்தொடங்கிய அடுத்த நிமிடமே அதே விரல் மீண்டும் தொட்டது என்னை, அழக்கூடாது செல்லம், பயப்படாதே அப்பா இருக்கிறேன் உன்னோடு என்று கூறிக்கொண்டே.


இருந்த போதிலும் அழ ஆரம்பித்தேன் என் மீது விழும் அந்த விரலை கெட்டியாக பிடித்துக்கொள்ள எப்பொழுதும் இனி...
 - 15-Nov-2012, 11.05 pm - மொழி தெரியா உயிர்


Saturday, June 23, 2012

வாழ்க்கை(வலி)ன்னா என்ன? --ஒரு உண்மை சம்பவம் உங்களுக்காய் கலப்படமற்று (பாகம் - 7)



நன்றிங்க ஏழாம் பாகத்தை படிக்க வந்ததிற்கு,சரிங்க,  தொலைபேசி  ஒலித்த அந்த படபடப்பான நிமிடங்களில் என்ன நடந்தன,அதன் பின் அரங்கேறியவைகள் என்ன என்று பார்ப்போம்.. 
முதல் பாகம் இணைப்பு இங்கே : -
முதல் பாகம்

இரண்டாம் பாகம் இணைப்பு இங்கே : -
இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம் இணைப்பு இங்கே : -
மூன்றாம் பாகம்

நான்காம் பாகம் இணைப்பு இங்கே : -
நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம் இணைப்பு இங்கே : -
ஐந்தாம் பாகம்


ஆறாம் பாகம் இணைப்பு இங்கே : -
ஆறாம் பாகம்




ஒருவித படபடப்புடன் தொலைபேசியை செயல்பெற செய்கிறேன்.எதிர்முனையில் ஒரு பெண்ணின் குரல்.

OtherEnd(மறுமுனை): This is vijay? (நீங்க தானே விஜய்?)
me(நான்): yes, am vijay.(ஆமா நான் தான்)

OtherEnd(மறுமுனை): Nisha calling from fourth dimension, Currently we are recruiting prople for java project. we are looking for the candidate who have experience around 2 years. (நான் நிஷா பேசுறேன் போர்த் டைமன்சன் அப்டிங்கற நிறுவனத்துல இருந்து அழைக்கிறேன்.எங்கள் நிறுவனத்தில் ஜாவா கணினிமொழியில் வேலை செய்ய இரண்டு வருட அனுபவம் ஆள் தேவை படுகிறது,)
me(நான்): ok (சரி)

OtherEnd(மறுமுனை): you are looking for a change right?.(நீங்கள் வேலை மாற நினைக்கிறீர்களா?)
me(நான்): yes(ஆம்)

OtherEnd(மறுமுனை): Ok, How many years experience you have in java.?.(எவ்வளவு வருட அனுபவம் உள்ளது ?. )
me(நான்): yes i have around 2 years experience in java. (ஏறக்குறைய இரண்டு வருட அனுபவம் உள்ளது )

other End(மறுமுனை): ok good.can you attend the interview tomorrow?.(சரி நேர்முகத்தேர்விற்கு நாளை வர முடியுமா?)
me(நான்): sure(சரி)

OtherEnd(மறுமுனை): Please tell me the convinet time. (உங்களுக்கு உகந்த நேரத்தை சொல்லுங்கள்)
me(நான்): 2.45

OtherEnd(மறுமுனை): good, vijay,notice period?(தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் பணியில் சேர நீங்கள் எடுத்துகொள்ளும் காலம் எவ்வளவு?)
me(நான்): ( Think....) ,around 2 years. (இதற்க்கு அர்த்தம் புரியவில்லை.நிறுவனத்தில் பயன்படுத்தும் சில வார்த்தைகள் வேறு வித பொருளை கொண்டு இருக்கும், நான் தவறாய் அனுபவத்தை கேட்கிறார்கள் என இரண்டு வருடம் என சொல்கிறேன்)

OtherEnd(மறுமுனை): (she got shocked....) and asked me wat?..3 months or 2 months?(திகைப்புடன் என்ன சொல்கிறீர்கள்?, மூன்று மாதமா?, இரண்டு மாதமா?.)
me(நான்): 3 months.(மூன்று மாதம் )

OtherEnd(மறுமுனை): thanks vijay, bye (நன்றி விஜய், மீண்டும் சந்திப்போம் ).
அவ்வளவு தாங்க வேலையே கிடைச்ச மாதிரி அவ்வளவு சந்தோசம் , அட நேர்முகத்தேர்வுக்கு தானடா கூப்பிட்டாங்க இதுக்கே இப்படியா அப்டின்னு நமக்குள்ள இருக்குற நியாயவாதி கேட்பான் கேள்விய,அட போடா நாங்க எல்லாம் அப்டி தான் அப்டினுகிட்டு போவோம்.பரபரப்பா சில நிமிடங்கள் இருந்துச்சு அப்புறம் கொஞ்ச நேரம் அமைதியா உட்கார்ந்து என்ன என்ன பண்ணனும் அப்டின்னு ஒரு பெரிய லிஸ்ட் எடுக்க ஆரம்பிச்சாச்சு. முதல்ல முகச்சவரம் பண்ணனும். அப்புறம் வேளச்சேரி மழைல நனைஞ்சு பிஞ்சு போன காலணிய சரிபண்ணனும் .அப்புறம் பக்கத்துல இருக்குற கம்ப்யூட்டர் செண்டர்க்கு போயி அவுங்க அனுப்பின கம்பெனி முகவரி அடங்கிய நேர்முகத்தேர்வு அழைப்பிதழை நகல் பிரிண்ட் எடுக்கணும்,அப்புறம் நம்ம சுயவிவரம் அடங்கிய தாளையும் பிரிண்ட் எடுக்கணும். அப்புறம் இருக்குற அரைகுறை சட்டைய அழகாய் வெள்ளையா மாத்தணும், மாத்தினதுக்கு அப்புறம் பெட்டிபோட்டு மடிப்பு கலையாம பத்திரமா தயார் செய்யணும்.

அப்புறம் உட்கார்ந்து இதுவரைக்கும் படிச்சதை எல்லாம் திருப்பி மறுபடியும் ஞாபகப்படுத்தணும், அப்புறம் நமக்கு சுட்டுபோட்டாலும் வராத ஆங்கிலத்த பேசி பாக்கணும் கொஞ்சம் ஸ்டைலா.

லிஸ்ட் ரெடி ஆனதும், கொஞ்சம் வேகமாவே லிஸ்ட்ல இருக்குறத ரெடி பண்ண ஆரம்பிச்சாச்சு, அட எப்பவும் காத்துவாங்கிகிட்டு இருக்கும் சலூன் கடை கூட இன்னைக்குனு பாத்து சரி கூட்டமா இருக்கும். அங்க கொஞ்ச நேரம் காத்து இருந்து முகச்சவரம் பண்ணுறதுக்குள்ள இன்னும் கொஞ்சம் வளந்துரும்.அப்புறம் அங்க இருந்து கிளம்பி ஓடி போயி செருப்பு தைக்கிற கடைல போயி நின்னு எவ்வளவுங்க தைக்கிறதுக்கு அப்டின்னு கேட்டா அவரு யானை விலை சொல்லுவாரு தைக்கிறதுக்கு.

அதையும் மீறி பேரம் பேசினா, எப்பா தம்பிகளா, கண்ணாடி போட்ட கடைகளுக்குள்ள போன சொன்னா சொன்ன விலை கொடுப்பீங்க, இங்க மட்டும் வந்து அஞ்சுக்கும் பத்துக்கும் அடிச்சு பேரம் பேசுவீங்க அப்டின்னு செருப்பால அடிக்காம,அடிச்சமாதிரி கேள்வி கேட்பாரு.அதுசரி அவரு கோவத்துலயும் ஒரு நேர்மை, நியாயம் இருக்குதானே.சரிங்க தைச்சுவைங்க, அப்புறம் கீழ இதையும் ஒட்டிவிட்டுருங்க, நான் ஒரு மணி நேரம் கழிச்சு வரேன் அப்டின்னு சொல்லிட்டு நேர அப்டியே,கம்ப்யூட்டர் சென்டர் போயி,அடிச்சு புடிச்சு ஒரு இடம் புடிச்சு, உட்கார்ந்து பார்த்தா கம்பனில இருந்து மெயில் வந்து இருக்கும்.அதை பார்த்த உடனே ஒரு பீலிங்,அங்க வேலை கிடைக்கிற மாதிரி, அதுமட்டும் இல்லாம பாருடா நமக்குன்னு ஒரு கம்பனில இருந்து ஸ்பெஷல்அஹ மெயில் வருது அப்டின்னு நம்பவும் முடியாம, நம்பாமாவும் இருக்கமுடியாத அப்டி அது ஒரு இனம் கலந்த சுகம்.அனுபவிச்சவங்களுக்கு புரிஞ்சிருக்கும்.

டக்குனு வேலைய முடிசுகிட்டு ஓடி போயி காலனிய வாங்கிகிட்டு,நேர நம்ம டீ கடைக்கு நடைய கட்டுவேன் .அண்ணா ஒரு டீ அப்டின்னுசொல்லி, நாங்களும் வருவோம்ட அப்டின்னு நினைச்சுகிட்டே குடிச்சிட்டு.அண்ணா வரேன் நாளைக்கு நேர்முகத்தேர்வு இருக்கு அப்டின்னு நம்ம சொல்றப்ப, அப்படியா,கிடைச்சிரும் போய்ட்டுவா அப்டின்னு அவரு வாழ்த்துகிரப்ப தானுங்க, இந்த சென்னைய ரொம்ப பிடிக்க ஆரம்பிக்கும். அப்பா அம்மா பக்கத்துல இல்லாத குறை தொண்டைய அடைக்கும்.பக்கத்து வீட்டுக்கு போனாவே மூச்சுக்கு முன்னூறு தடவை பாத்துபோய்ட்டுவா பாத்துபோய்ட்டுவா அப்டின்னு சொல்ற அம்மாவை ஏளனமா பாத்து சிரிச்சுட்டு உனக்கு வேறவேலை இருந்தா போயி பாரு அப்டின்னு சொன்னத நினைச்சு, கொஞ்சம் கண்ணுகலங்க ஆரம்பிக்கும்.ஒரு வருட படிப்புக்கு பரீட்சை எழுத போகும்போதே,சாமி கும்பிட்டு திருநீர் வைச்சுகிட்டு போ அப்டின்னு சொல்ற அப்பாவோட வாழ்த்துக்கள்,இப்பொழுது வாழ்க்கை தொடங்குறதுக்கான பரீட்சை எழுதபோகிரப்ப வாழ்த்த பக்கத்துல இல்லைங்கற வருத்தம் எட்டிப்பாக்கும்.சரி சரி போதும் பீலிங் கிளம்பு, போயி அடுத்த நடவடிக்கைகள ஆரம்பி, அப்டின்னு நமக்குள்ள இருக்கிற கருத்து கண்ணாயிரம் கடுப்பாயி திட்டுவான். சாரி பாஸ் அப்டின்னு சொல்லிட்டு நடையகட்டுவேன் என் அறைக்கு போனதும் புத்தகத்த எடுத்து படிச்சு படிச்சு சொல்லிப்பார்த்துகிட்டே ,இடையில் கொஞ்சம் சாப்பிட்டுட்டு மறுபடியும் படிக்க ஆரம்பிச்சு எப்போ தூங்கிபோனோம் அப்டினே தெரியாது,

ஆனா எனக்கு வேலை கிடைச்சு இருக்கும்.அட நீங்க வேற, ஆமாங்க கனவுல தான்.கனவும் தூக்கமும் தொலைஞ்ச நேரத்தில எழுந்திருச்சு வேகமா படிக்க ஆரம்பிச்சு அப்டியே மெது மெதுவா படிப்போட வேகம் குறைஞ்சு(Interview Fear).நேர்முகத்தேர்வு பயம் வர ஆரம்பிக்கும் பாருங்க, அடேங்கப்பா குறைஞ்சு ரெண்டு மூணு தடவையாவது கழிவறைக்கு போக வேண்டியிருக்கும்,போயிட்டு வந்தாலும் ஒரு மாதிரி பயம் கழுத்துக்கும், வயித்துக்கும் நடுவுல ஓடிகிட்டே இருக்கும். குறிப்பிடப்பட்ட நேர்முகத்தேர்வு நேரத்துக்கு, ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடியே தயாராக ஆரம்பிச்சிடுவேன். தயாரா போயி கண்ணாடி முன்னாடி நின்னா,முகத்துல பயம் ஒட்டி இருக்கும். என்ன கேட்பானுகளோ?,

வேலைய வாங்கியே ஆகணும், எத்தன பேரு நேர்முகத்தேர்வு எடுப்பனுகளோ, இவனுக பேசுற ஆங்கிலம் புரியுமா?.பதில் சொல்லுல அப்டினா கண்டுபிடிச்சுருவானுகளா?.கண்டுபிடிச்சா அசிங்கபடுத்தி மட்டும் விட்டுருவானுகளா?,இல்ல வேற ஏதாவது மற்ற கம்பனில நேர்முகத்தேர்வு போகமுடியாத மாதிரி பன்னிருவானுகளா?....இப்படி ஆயிரம் பயம்,அதை எல்லாத்தையும் மறைச்சிட்டு,போயி தான் பார்ப்போம்டா.

எது நடந்தாலும் நாலு சுவத்துக்குள்ள,திட்டினாலும், காறித்துப்பினாலும் நாலுசுவத்துக்குள்ள, வெளிய வந்தா தெரியபோறது இல்ல, அதுமட்டும் இல்லாம நமக்கு என்ன இவன் பொண்ணா கொடுக்க போறான் அசிங்கபட்டுட்டோம் அப்டின்னு பீல் பண்றதுக்கு.மறுபடியும் இவ்வளவு பெரிய சென்னைல அவன் கண்ல நம்ம திரும்பி படவா போறோம். அப்டின்னு மனசுக்கு ஏதோ காரனத்த சொல்லி சமாதனப்படுத்திகிட்டு திரும்பியும் கண்ணாடிய பார்த்து நமக்கு நாமளே சொல்லிபோம் பயம் இல்லைட இப்போ உன் முகத்துல, நீ சமத்துடா அப்டின்னு. அப்டியே வீட்டை விட்டு கிளம்பி வேளச்சேரி பேருந்து நிலையத்துக்கு போயி நின்னு சைதாபேட்டை பெருந்த தேடினா அது நம்ம கன்னுமுன்னாடியே நிக்கும்,அய்யோ அப்டின்னு ஒரு பயம்,அதுன்குள்ள என்ன அவசரம் அடுத்த பேருந்துல போலாம் அப்டின்னு சாவை தள்ளிபோடுற மாதிரி தள்ளிபோட வேண்டியிருக்கும் பயத்துல.ஆனா அதை பயம்னு காட்டிகிறது இல்ல,நான் பயப்பட எல்லாம் இல்ல, சரி அதுக்குள்ளே போயி என்ன பன்னபோறோம் அப்டின்னு தான் தள்ளிபோட்டோம் அப்டின்னு நமக்குள்ள இருக்குற,உன்னால முடியும் அப்டின்னு வீறாப்ப பேசினவன்,உள்ளுக்குள்ள பயந்துகிட்டு இருக்குற பயந்தாகோளிகிட்ட காரணம் சொல்லிக்கிட்டு இருப்பான்.கடைசியா ஒருவழியா அரைமணி நேரம் கழிச்சு சைதாபேட்டை பேருந்துல ஏறி கிளம்பிடுவோம்.சைதாபேட்டைல இறங்கியாச்சு.

சைதாபேட்டை சாலையோரம் நடந்துகொண்டே தேடினேன். ஒரு உயர்ந்த மாளிகையில் நான்காவது தளத்தில் இருப்பதை கண்டறிந்தேன். அட கம்பெனிய பார்த்ததும் என்ன என்னமோ நடக்குது எனக்குள்ள.அதெல்லாம் சொன்னா புரியாது தம்பி அனுபவிச்சாதான் தெரியும் அப்டின்னு சொல்லுவாங்களே பெரியவங்க அந்தமாதிரி தான் அந்த மாற்றங்கள். எப்புடியும் ஜெயிச்சுபுடனும்,நம்ம கம்பனில வேலை செய்யுறதா- பொய் சொன்னது தெரியாம பாத்துக்கணும், எல்லா கேள்விக்கும் விடை சொல்லிடனும் அப்டின்னு பல பயம் வந்து வந்து போற நேரத்துல கம்பனிய கண்டுபிடிச்சப்ப வரும் பாருங்க ஒரு நடுக்கம் அட அட ...அதெல்லாம் சொன்னா தெரியாதுங்க அனுபவிச்சா தான் தெரியும்..

அப்படியே படிக்கட்டு வழியா மேலபோயி பார்த்தா, நம்மள வரவேற்கிறதுக்காகவே காத்திருக்கு ஒரு பொண்ணு மேக்கப் எல்லாம் போட்டுக்கிட்டு.என்னை பார்த்ததும்

பொண்ணு:Come Please, your name? நான்:Yes ,Vijayakumar.A (with smile)

பொண்ணு:you are come for java right? நான்:Yes ,(with smile)

பொண்ணு:Please give your resume நான்:just hand over my resume with her

பொண்ணு:Please be seated நான்:Thankss

மெதுவா உட்கார்ந்தேன், ஏற்கனவே ஒரு நான்கு பேர் உட்கார்ந்திருந்தாங்க என்ன மாதிரி நேர்முகத்தேர்வுக்கு வந்தவங்க. கொஞ்சம் நேரம் அமைதியா இருந்தது.பக்கத்துல இருக்குறவன் மெதுவா என்கிட்டே பேச ஆரம்பிச்சான்.

அவன்: நீங்க எந்த கம்பனில வொர்க் பண்றீங்க.? நான்: (மனசுக்குள்ள- கேட்டாண்ட ஒரு கேள்வி நறுக்குன்னு) கம்பனி பெயர் சொன்னேன்.

அவன்: (கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு) எங்க இருக்கு கம்பனி? நான்:(மனசுக்குள்ள -அது தெரிஞ்சா நான் ஏன் இங்க இருக்குறேன்?).பெசன்ட் நகர்,அடையார்ல.

அவன்:பெசன்ட் நகர்லையா? நான்:(மனசுக்குள்ள-அய்யயோ இவன் பெசன்ட் நகர இருப்பானோ?.)ஆமாங்க

அவன்: பெசன்ட்நகர்ல எங்க? நான்:(மனசுக்குள்ள-விடமாட்டான் போல இருக்கே, கம்முனு சரண்டர் ஆகிடலாம?..வேண்டாம் வேண்டாம் சமாளிப்போம்)-விநாயாக அபார்ட்மென்ட்ல,சின்ன கம்பெனி தான் ஒரு ஆறு பேறு வொர்க் பண்றோம், எங்க காலேஜ் சீனியர் ஆரம்பிச்ச கம்பெனி.

அதுன்குள்ள அவன உள்ள கூப்பிட்டுட்டாங்க.நிஜமா அவ்வளவு சந்தோசம், தப்பிச்சம்டா சாமி அப்டின்னு தோனுச்சு.இவனே இப்படி கேட்கிறான்,உள்ள என்ன பண்ணப்போறானோ அப்டின்னு எச்சிய முலுங்கிகிட்டு certificate fileல கைல அலுத்திபிடிச்சுகிட்டு பதட்டத்தோட அமர்ந்து இருந்து என்கிட்ட Excuseme,Can you move a bit?.திரும்பிபாத்தா ஒரு பொண்ணு நுனிநாக்குல English .நுனி உதட்டுல Lipstick.இவ கண்டிப்பா வேலை வாங்கிடுவாடோய் அப்டின்னு நினைசுகிட்டு தள்ளிஉட்கார்ந்தேன்.கொஞ்ச நேரத்துல விஜயகுமார் அப்டின்னு அழைச்சாங்க.படபடன்னு,கிடுகிடுன்னு பதறியடிச்சு ஓடி போயி நின்னேன்.உள்ள போங்க அப்டினாங்க.உள்ள போனது வாயில வார்த்தை வருல தலைஅசைச்சு சைகை காட்டினேன் Yes அப்டின்னு,இதுல Smile வேற,கவர் பன்றாரமா Interview எடுக்கவந்தவர.

அவர்: Hi vijay?,introduce yourself? நான்:Iam vijayakumar,Working as a software engineer in ...... .I have 1.5 years exp in java.Currently am working in online shopping project.am working in payment model. this model contain many screens regarding the consumer and retailer and buyer inormation and the transaction related screens.then my achievement is Got district second mark, i got 96%.father is a former, mother is a housewife, i have one younger brother , he is doing CA. அவர்: What is the difference between abstract class and interface?. நான்:abstract class can have congrete method.but interface can not have congrete method.abstract class implements for single inheritance concepts.interface implements for multifleinheritance concept.when we want the use the abstract class we have to use extend keyword..when we want to use the interface in another class mean we have to use implements keyword.and interface can have only static and final varaibles but abstarct class not. அவர்: What is the difference String and stringBuffer which one is fast why? நான்:String is immutable.mean when we try to append or add some string with existing string, it will create a new object in heap memory.String buffer is mutuable, we can append or add the string in exisitng string itself. Stringbuffer is fast, because for creating stringbuffer taking small amount of code in bytecode,we can see the difference in .class file for string object and stringbuffer object.
.

.

அவர்: What is your day acitvities daily in your office? நான்: writing a code from morning to evening. அவர்: Daily u will write the code from morning to evening and then wat wil do? நான்: just report to project manager about work status.

இவ்வளவு நேரம் கேட்டுட்டு கடைசியா ஒரு கேள்விகேட்டாரு பாருங்க?.

அவர்:U are really working? (நீங்க நிஜமா வொர்க் பண்ணிஇருக்கீங்களா)?.பொய்யா ஆச்சர்யத்த முகத்துல வரவைச்சுகிட்டு yes I am working in .... .(ஆமா ,நான் வேலை பாத்துகிட்டு தான் இருக்கேன்) உடனே சொன்னாரு (your answers are not like a experienced)உங்க பதில் எல்லாமே அனுபவமுள்ளவர் பதில் மாதிரி இல்ல. (anyway thanks for your time, please wait outside)சரி நன்றி வந்ததிற்கு வெளிய காத்திருங்க அப்டின்னு.

நம்ம சொல்ற பொய்ய யாரவது கண்டுபிடிச்சு நம்மள அசிங்கபடுத்தும்போது முதல்ல கலங்கி காட்டிகொடுக்குறது நாம கண் தாங்க. இங்க அழுதுவிடகூடாதுன்னு நினைசுகிட்டு வேகமா அலுவலகத்த விட்டு வேகமா வெளிவந்தேன்.ஒவ்வொரு படிக்கட்டும் சத்தமில்லாம என் கண்ணீர வாங்கிகிச்சு,என்ன சொல்ல.சைதாபேட்டை பேருந்துநிறுத்தம் வரைக்கும் தான் தாக்குபிடிக்கமுடிஞ்சுது.அதுக்குமேல முடியல certificate fileஅ ஓரமா வைச்சிட்டு தேம்பி தேம்பி அழுத அழுகை இன்னும் நாபகம் இருக்கு.தோத்துட்டமே,எப்டி ஜெய்க்கிறது இனிமேல்?.எப்டி படிச்ச கடன அடைக்கப்போரோம்?.நல்லாதான பதில் சொன்னோம்?.அனுபவமுள்ளவர் பதில்மாதிரி இல்லன்ன நான் என்ன பண்றது?.நானும் அவ்ளோ படிச்சனே?.நம்மளவிட திறமை இல்லாதவங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறப்ப நமக்கு மட்டும் ஏன் ஒரு சந்தர்ப்பம் கூட கிடைக்க மாட்டீங்குது?.நிச்சயம் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தா நிச்சயம் நல்ல நிலைமைக்கு வந்திடுவேன்.அப்டிங்கற எண்ணங்கள் என் அழுகையை தொடரசெய்தது,என் அழுகைய நிறைய பேர் பாத்தாங்க இங்க அழக்கூடாதுன்னு மனசு சொல்லுது, ஆனா முடியல.

அப்படியே பேருந்த பிடிச்சு வேளச்சேரி வந்தாச்சு.வேலை இல்லாம கஷ்ட்டபடுரவங்கலோட கவலைய ஆத்துரதே நிறையா டீ கடைங்க தான். அதுவும் தெரிஞ்ச டீ கடைக்காரர இருந்தா இன்னும் அருமை.அவரு ஆத்துற டீ யில நம்ம கவலையும் ஆறிடுமுங்க.அந்த கடைல வைச்சு இருக்கிற ஐம்பது காசு நெய் பிஸ்கெட்டும்,தேங்காபர்பியும் அந்தநாள் பசியவே ஆத்திடுமுங்க.கழுத ஆனந்தபவன் ஐம்பது ரூபா சாப்பாடு தள்ளிநிக்குமுங்க இந்த ஐம்பது காசு நெய் பிஸ்கெட்டுக்கு முன்னாடி.அதுவும் அந்த கண்ணாடி பாட்டில் துறுபிடிச்ச மூடிய திறந்து கைய உள்ளவிட்டு நெய்பிஸ்கெட்ட தொடும்போதே பாதிபசி ஆறிடுமுங்க.

அப்படியே டீ ஒரு முடங்கு,பிஸ்கட் ஒரு கடி,அப்படியே ஒரு லுக்கு சாலைய.போய்கிட்டு இருக்குற பெரிய கம்பெனிங்க பேருந்த பார்த்து, நாங்களும் வருவோம்டி சீக்கிரமே, நாங்களும் engineer அப்டின்னு மனசுக்குள்ள சவால்விட்டுகிட்டு இருப்போம் அந்தசமயத்துல நம்ம டீ கடைக்கார அண்ணா கேப்பாப்புல தம்பி, என்ன ஆச்சுப்ப போன காரியம் அப்டின்னு,கிடைக்கலன்னா அப்டின்னு சொல்லிமுடிக்கிரதுக்குள்ள சொல்லுவாப்ள- தம்பி, சரவணன் அப்டிங்கற தம்பி உங்க படிப்பு தான் படிச்சு இருக்காப்ல, அவரும் இங்க தான் டீ குடிக்க வருவாப்ல , அந்த தம்பியும் ரொம்ப நாள் தேடினாப்ள, போனவாரம் தான் அவருக்கு வேலை கிடைச்சதுனாப்ள சம்பளம் நாப்பதாயிரமாம் அப்டின்னு சொல்லி, டீ யில Boost போடாமலே நம்மள Boost பன்னுவாப்ள.

மறுபடியும் நம்பிக்கையை Boost பண்ணிக்கிட்டு Certificate fileல தூக்கிக்கிட்டு அறைய நோக்கி நடப்போம்ல தங்கப்பதக்கம் சிவாஜி மாதிரி.அட நீங்க எங்க கிளம்பிட்டீங்க, பின்னாடி வாங்க பாஸ், இன்னும் நிறையா இருக்கு உங்ககிட்ட பகிர்ந்துக்க துளியும் கதையாய் இல்லாமல் நிஜமாய்.









Friday, January 13, 2012

யாருங்க சொன்னது???..உங்களுக்கும் நடக்கலாம். உண்மைச்சம்பவம் .



அட என்ன பாக்குறீங்க?..அட எல்லோரும் பொங்கல்க்கு ரிலீஸ் பண்ணும்போது நம்ம பண்ணுல அப்டினா எப்படி? அதான் ஓடி வந்துட்டேன் உங்ககிட்ட ஒண்ணு சொல்லிட்டு போக..இருங்க இருங்க அவசரபடாதீங்க..கண்டிப்பா விளக்கமா சொல்லிட்டு தான் போவேன்.. :)

கல்யாணம் அப்டின்னு சொல்லிப்பாருங்க பிரெண்ட்ஸ்ல இருந்து பெரியவங்க வரை,நண்பன்ல இருந்து எதிரி வரைக்கும் சொல்லுற முதல் பதில் "இனி சிறை வாழ்க்கை தான், சுதந்திரம் போய்டும், அப்டி இப்டினு போட்டு தாளி தாளின்னு தாளிச்சு விட்ருவாங்க..இன்னும் சிலபேர் ஒன்னுமே சொல்லாம , மேலையும்,கீழையும் பாத்துட்டு ஒரு நக்கல் சிரிப்பு சிரிப்பாங்க பாருங்க,சொன்னவனுக்கு அடிவயிறே கலக்க ஆரம்பிச்சிடும்.

அட இன்னமுமா புரியல உங்களுக்கு?..அப்படி சொல்லுடி என் ராசாத்தி, அதே தாண்டிமா, அதேதான் கல்யாணத்த பத்திதாங்க சொல்ல வந்தேன். ஹலோ எனக்கும் தெரியும் கல்யாணத்த பத்தி, நாங்களும் சொல்வோம் உண்மை என்ன அப்டின்னு.இதுக்கு முன்னாடி எழுதி இருந்தா உனக்கென்ன தெரியும் அந்த கஷ்டத்த பத்தி அப்டின்னு கிளம்பி இருப்பீங்க, இப்ப அப்டி சொல்ல முடியாது,இருந்து கேட்டுட்டு தான் போகணும், வேற வழி இல்ல. கல்யாணத்த பத்தி சொல்றேன் அப்டினுட்டு பொய் எல்லாம் சொல்ல மாட்டேங்க, நிசத்த தான் அதுவும் என் கல்யாணத்த பத்தி தான் சொல்ல போறேங்க..அட வாங்க வந்து உட்கார்ந்து கேட்டுட்டு போங்க நண்பா.

கைய கிழிச்சுகிட்டு நீ இல்லனா செத்துடுவேன்,உன்ன கொன்னுட்டு நானும் தற்கொலை பண்ணிப்பேன், உனக்காக உயிருள்ளவரை போராடுவேன், நீ இல்லனா கல்யாணம் பண்ணிக்கமா உன்னையே நினைசுகிட்டு இருப்பேன்..அப்டின்னு எல்லாம் சொல்ற, செய்ற அளவுக்கு எனக்கு ஒன்னும் பெரிசா நடக்கல அப்டினாலும், கொஞ்சம் அழகான பொண்ண பாக்குறப்ப, அடடே இந்த பொண்ணு நம்ம மணைவியா வந்தா நல்லா இருக்குமே, அறிவாற்றல், திறமை அதிகமா இருக்குற பொண்ண பாக்குறப்ப, இந்த பொண்ண கட்டினா நம்ம எங்கையோ போய்டுவோம் அப்டினாவது நினைச்சு இருக்கேன். (அப்புறம் இப்படி என்னக்கு தோணவே இல்லைன்னு சொன்னா நீங்க அந்த பக்கம் போயி புளுகுறான் புளுகு மூட்டை அப்டின்னு சொல்லிற மாட்டீங்களா, அதான் உண்மைய சொல்லிட்டேன் இங்க,இப்படி சொன்னதால குடும்பத்துல பிரச்சனை வரலாம், அட வந்தா நீங்க வந்து தீர்த்து வைக்க மாட்டீங்களா?, அந்த தைரியத்துல தான் சொல்லிட்டேன் ).

இப்படி இருக்குறப்ப ஒருநாள் வீட்டுல இருந்து ஒரு போன், குமாரு இப்படி ஒரு பொண்ணு இருக்கு அப்டின்னு. பொண்ண எல்லாம் போயி பாத்து அவுங்க நம்மள பிடிக்கல அப்டின்னு சொன்னாலும், நம்ம அவுங்கள பிடிக்கல அப்டின்னு சொன்னாலும் வருத்தம் ,இதுதேவையா அப்டின்னு எனக்கு வேலை இருக்கு அப்டின்னு ஒரு கதைய விட்ட பிறகும், விடாம கூட்டிகிட்டு போயி நிப்பாட்டுரப்ப, வேர்த்து கொட்டும் பாருங்க..அய்யயோ இது அனுபவிச்சவனுக்கு தான் தெரியும்.பொண்ண பார்த்தா நம்ம நினைச்சு பாக்காத, கனவு காணாத ஒரு முகம்.பிடிச்சுருக்கா, பிடிக்கலையா நமக்கு அப்டினே புரியல.இதுல பட்டுன்னு பொண்ணு வீட்டுக்காரர் ஒருத்தர் பொண்ணுக்கு பிடிசுருக்குப்பா, மாப்பிள்ளைக்கு பிடிச்சிருக்கா? அப்டின்னு ஒரு கேள்விய அணுகுண்டு மாதிரி அள்ளி போட்டருபாருங்க, அவ்ளவுதான் ..படபடனு இதயம் துடிக்கும் பாருங்க,பின்ன என்ன நண்பா ஐந்து நிமிசத்துல முடிவ சொல்லுனுமே, எப்படியா முடியும், நல்ல பொண்ணா, குணம் எப்படி,அனுசரிச்சு போவாங்களா ?,இது எல்லாத்துக்கும் மேல நமக்கு இந்த பொண்ண பிடிச்சுதா?..முக்கியமா நம்ம அப்பா அம்மாவுக்கு மரியாதை கொடுப்பாங்களா ?.நம்ம பிடிக்கல அப்டின்னு சொன்னா அந்த பொண்ணு கஷ்டபடாத?..ஏகப்பட்ட கேள்விங்க.

இதுல பொண்ண வேற ஏதோ மின்னல் மாதிரிதான் பாத்தேன். அப்படி இப்படின்னு ஒரு ஐந்து நிமிஷம் அவ்வளவு தான், நம்ம ஆளு சரிஅப்டின்னு தலையசைசுட்டான்.அய்யயோ அப்புறம் அப்டின்னு நீங்க ஆர்வமா கேட்டாலும், கேட்குளைனாலும் பாவம் நம்ம பயனுக்கு வேற வழி இல்ல அந்த இடத்துல. அப்புறம் தான் தோணுது நம்ம பயலுக்கு, நம்ம செலக்ட் பண்ணின பொண்ணு நம்ம நினைச்சது மாதிரி சரியான பொண்ணு தான அப்டின்னு, டக்குனு போன் நம்பர் வாங்கி பேச ஆரம்பிச்ச ஒரு ஐந்து ஆறு நாளுல புரிஞ்சுது சூப்பர் பொருத்தம் அப்டின்னு.அப்பதாங்க வாழ்க்கைல ஒரு வெளிச்சம் வந்த மாதிரி ஒரு நிம்மதி.

அப்புறம் கல்யாண நாள் வந்துச்சுங்க,அப்பத்தான் நிறையா சின்ன சின்னதா தவறான புரிதல்கள்..அட பொன்னுக்கும் பயனுக்கும் இல்லைங்க.பொண்ணு
வீட்டுபக்கத்திலையும், பையன் வீட்டு பக்கத்திலையும்.இவுங்க ஒண்ணு சொன்னா அவுங்க வேண்டாம்ன்கிறாங்க,அவுங்க ஒண்ணு சொன்னா இவுங்க வேண்டாம்கிறாங்க.அய்யயோ என்ன நடக்குனே புரியல.இவுங்க புடிச்ச முயலுக்கு மூணு காலுங்க்றாங்க, அவுங்க காலே இல்லைங்கறாங்க, அட நம்ம நாளுகாளுண்ணுல படிச்சோம் அப்டின்னு குழப்பம் வேற எனக்கு.

இல்ல மாப்பிள எங்க வீட்ல தான் இருக்கணும் இன்னைக்கு அப்டின்னு ஒருபக்கம், இல்ல பொண்ணு எங்க வீட்ல தான் இருக்கணும் இன்னைக்கு.அப்டின்னு பல சின்ன தவறான புரிதல்கள் அப்டின்னு சொல்றத விட, ஒருவிட்டுக்கொடுக்க முடியா அளவுகடந்த அன்பு, தன்பையன் நல்லா இருக்கணும், தன்பொண்ணு நல்லா இருக்கணும் அப்டிங்கற ஒரு அதீத பாசம் அப்டின்னு கூட வைச்சுகலாம்ங்க.எல்லோரும் நல்லா இருக்கணும் அப்டின்னு போராடற ஒருநாள் யுத்தகளம் தானுங்க இந்த கல்யாண நாள்.

கல்யாணம் அப்டிங்கறது ஒரு சாதாரண விசியம் இல்லைங்க, இன்னைக்கு இருக்குற எத்தனையோ பிரச்னைக்கு தீர்வுங்க.கள்ளக்காதலனோட காதலி ஓட்டம், கணவனை கொன்றுவிட்டு காதலனை கரம் பிடித்தாள்,காதலி திருமணம்,காதலன் தற்கொலை.ரயில் நிலையத்தில் பிட்பாகட் அடிக்கும் சிறுவன் பிடிபட்டான்.தொடரும் சைக்கோ கொலைகள்,அறுபது பெண்களை சீரழித்தவன் பிடிபட்டான், இன்னும் எத்தனையோ அதிமுக்கிய நிகழ்வுகளுக்கும், சீரழிவுக்கும்,எதோ ஒரு மூலையில் நிச்சயம் அடிப்படை காரணமாய் அமைந்திருப்பது இந்த கல்யாணம் தான் என்பதை நம்பமுடிகிறதா ?.நம்பித்தான் ஆகவேண்டும் நாம்.

ஒரு பெண் ஆண் மேல் வயப்படுவதும், ஒரு ஆண் பெண்மேல் வயப்படுவதும் இயற்கையான, தவிர்க்க முடியாத ஒன்று தான், ஒரு சாதாரண மனிதன், தெய்வங்களை போல் ஒரு சக்தி,ஒரு வரம் இப்படி பிறக்காமல்,ஆணும் பெண்ணும் இணைந்து பிறப்பவன், நிச்சயம் காதல் உணர்வும், காம உணர்வும் பெற்றோரிடமிருந்து நாடி நரம்புகளில் இயற்கையாய் அமைந்திருந்தே ஆகவேண்டும்.அவற்றில் மாற்றம் ஏற்பட்டு இருந்தால் அவர்களுக்கு பைத்தியம்,சூடு சுரணை இல்ல,திருநங்கை, அரவாணி என்றெல்லாம் ஏதோ ஏதோ பட்ட பெயர்கள் வைத்து துரத்திவிடுவோம் என்பது வேறுகதை.

இப்படி இருக்க காதல் வரும், காமமும் வரும் வர வேண்டிய வயதில் சரியாய். அதற்க்கான தீர்வு என்பது முட்டுக்கட்டை இடுவது அல்ல.அவற்றை சரியான வழியில் பயணிக்க வைப்பது.ஒரு பதின் வயது பெண், அல்லது ஆண் காதல் வயப்படும்போது சரியான வழியில் பயணிக்க வைப்பது ஒரு பெற்றோரின் மிகமுக்கிய கடமை,இதற்க்கு சரியான பதில் இடாமல் கவனிப்பாரற்று விட்டுசெல்லும் பையனின்,பெண்ணின் கேள்விக்குறியாகிய வாழ்க்கைக்கு பெற்றோர் தான் முதன் பொறுபேற்க வேண்டும்.
இன்றைய செயிதித்தால்களில் " மாணவி தற்கொலை,நண்பர்கள் ஆபாசமாக எடுத்த வீடியோ வெளியிட்டதால்".இதற்க்கான அடித்தளம் வாழ்க்கைபற்றிய புரிதல், கல்யாணம் என்பது உலகத்தை பற்றிய புரிதல் , அதற்க்கான வயது, அதுவரை பயணிக்க வேண்டிய பாதை, சாதிக்க வேண்டிய தேவை,என்பதை பற்றிய தெளிந்த கருத்து அவர்களை சரியா சென்றடையாமை என்பதே.

பதின்வயதை தாண்டிய பெண் அல்லது ஆண் காதல் வையப்படுபோது, தன் துணையை தேர்ந்தெடுக்கும் பச்சத்தில்,சாதி, மதம், ஏழை, பணக்காரன், அந்தஸ்த்து, கௌரவம் இவைகளை தவிர்த்து, குணநலன், சரியான துணை,பழக்கவழக்கம் இவைகளை மட்டுமே அடிப்படையாய் வைத்து மனம் முடிக்கும் பட்சத்தில் ஒருமனிதனின் வாழ்க்கை சரித்திரத்தையே திரும்பி பார்க்கும் விதத்தில் மாற்றி அமைக்க முடியும். "கணவனை விட்டு காதலனை கரம் பிடித்தாள்",இந்த ஒற்றை வார்த்தையின் வலி பாதிக்கப்பட்டவனின் கரங்களில் ஒப்படைததிற்கு 'திருமணம் 'என்ற சரியாக தேர்ந்துடுக்கபடாத,தேர்ந்தெடுக்க அனுமதிக்கபடாத நிகழ்வு தான் காரணமாய் இருந்து ஆகவேண்டும்.

சரியான துணையை தேர்ந்துடுக்க அனுமதிக்க படாத பட்சத்தில் , "கள்ளதொடர்பை கண்டித்ததால் மனைவி கொலை, கணவன் வெறிச்செயல்'. இப்படிப்பட்ட நிகழ்வுகளின் தடங்கள் நமது தின செய்த்தால்களில் பதிந்து கொண்டு தான் இருக்கும். என்னப்பா இத்தனை நிகழ்வுக்கும் திருமணம் தான் காரணம் அப்டின்னு சொல்றியா, அவை சரியாக அமையாத பட்சத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் செய்திதாளில் தடம் பதிக்கிறன, சிறுவர்களுக்கு அவர்கள் காதல், காமம் போன்றவற்றில் தடம் மாறும் சமயத்தில் பெற்றோர்களின் அக்கறை மற்றும் அதை பற்றிய தெளிவான கருத்துகள் சென்றடயும் பட்சத்தில் சிறுவர்களின் வாழ்க்கையை சரியான பாதையில், சரித்திரம் உருவாக்கும் நிலையில் அமைக்க முடியும் என்கிறாயா?.. அட ஆமாங்க அதேதாங்க.

அட இந்த சமயத்துல நம்ம கதை பாதியிலே நிக்குதுங்கலே இதோ வரேன், இப்படி ரெண்டு வீட்லயும் போட்டி போடறத பாத்து அய்யயோ தப்பா கல்யாணத்த செலக்ட் பண்ணிட்டோமோ அப்டிங்கற பயத்துல,அய்யோ கல்யாணத்த பத்தி நண்பர்கள் பயமுறுத்தினது உண்மை தானோ அப்டின்னு யோசிச்சேன்.அட அப்புறம் ரெண்டு மூணு நாளுக்கப்புறம் தானுங்க புரிஞ்சுது,ஏங்க ரெண்டு பேறு உட்கார்ந்து பேசினாலே ஆயிரம் கருத்து வேறுபாடு வருது, இதுல ஐநூறு பேரு சேர்ந்து ஒரு நிகழ்வு நடத்தும் போது சின்ன சின்ன தவறான புரிதல் வரத்தானே செய்யும்ங்க.சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு?..எல்லோரும் நல்ல இருக்கணும் அப்டின்னு நினைச்சு செய்யுற காரியத்துல சின்ன சின்ன சண்டை வந்தா தப்பு இல்லைங்க.அட எல்லாம் நம்ம நல்ல இருக்க தான் அப்டின்னு நினைக்கும் போது கல்யாணம் அப்டிங்கறது எல்லோருக்கும் தேவையான,விரும்பி ஏற்றுக்கொள்கிற,மென்மையாய் ரசித்து பழக வேண்டிய, சரியாய் தேர்ந்தெடுக்க படவேண்டிய,காதலித்து கல்யாணத்துக்கு ஒப்புதல் வாங்கும் நேரத்தில்-சரியான துணையாக இருக்கும் பட்சத்தில்-அங்கீகரிக்க படவேண்டிய,சிறுவர்களுக்கு தெளிந்த புரிதலை கொடுக்க வேண்டிய, மிக முக்கியமான என் இந்திய தேசத்தின் அங்கீகாரமான மாசற்ற தூய்மையான இன்பம் ததும்பும் கலாச்சாரத்தை பறைசாற்றும், அந்நிய நாடுகள் பொறாமைப்படும் ஒரு புனிதமான நிகழ்வு "கல்யாணம்"..கல்யாணம் .

"என்னங்க, என்னங்க , விஜய் விஜய்,டேய் டேய் , சீக்கிரம் கிளம்பு நேரம் ஆச்சு எட்டு மணிக்கு பஸ்,இப்போ போனாதான் சரியா இருக்கும் ஈரோடு பஸ் பிடிக்க."ஹ ஹ ஹ அட ஆமாங்க சொல்ல மறந்துட்டேன் என் கல்யாண வாழ்க்கை நல்லா போகுதுங்க அதிக அன்பு, கொஞ்சம் சண்டை அப்டின்னு. அட நீங்களும் கல்யாணம் பண்ணிப்பருங்கலே..பயப்படாதீங்க நான் இம்புட்டு சொன்னதுக்கப்புறம் நீங்க கல்யாணம் வேண்டாம்னா சொல்ல போறீங்க..மறக்காம பத்திரிக்கை அனுப்புங்க நண்பா..

சரி நான் கிளம்புறேன்.என்னது எங்க கிளம்பிட்டனா?.நண்பா இது நமக்கு தல பொங்கல், போயிட்டு வரேன், நமக்கு இன்னொரு அப்பா அம்மா கிடைச்சு இருக்காங்க போயி பாத்துட்டு வரேன்..

அப்போ வர்ட்டா (இந்த வார்த்தை தேவா அண்ணாகிட்ட இருந்து காபி அடிச்சுட்டேன் )..வர்ட்டா..