Saturday, November 20, 2010

இப்பூமியில் கால் தடம் பதித்த என் குட்டி நிலவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் (நவம்பர்-22)




நீ ஞானம் உள்ளவளாய் வளரவேண்டும் என வாழ்த்த போவது இல்லை,

தெளிந்த அறிவு, மேலோங்கிய சிந்தனை, சிறந்த குறிக்கோள் உடைய என் தேவாஅண்ணா, உன் சிறந்த பெருமைக்குரிய அப்பாவாய்,
கனிவும், கருணையும் , நற்சிந்தனையும், பாசமும் உடைய என் அண்ணி, உன்சிறந்த பாசத்திற்குரிய அம்மாவாய்,

பிறகெதற்கு என் குட்டி நிலவிற்கு வாழ்த்துக்கள், தீர்மானிக்கப்பெற்ற ஒன்றுதானே.

குட்டி நிலவு , உவமைக்காக வடித்த வார்த்தை இல்லை, அத்தனை அழகையும்கொட்டி நிரப்பிய குட்டி நிலவின் வார்ப்பு நீ,

முதல் முறை பேசுகிறாய் அலைபேசியில் என்னுடன், உன் வார்த்தைகள் புரியவேண்டும் என்று பிரார்த்தனையுடன் பேச தொடங்கும் என்னிடம்,
"எப்படி இருக்கீங்க, சாப்பிட்டீங்களா?".......பாசத்துடனும் ,மரியாதையுடனும்உதிர்க்கபட்ட வார்த்தைகளில் நிரம்பி கிடக்கிறேன் என் குட்டி நிலவே, எவ்வளவுஅழகான வளர்ப்பு இலக்கணத்தில் வார்க்கப்பட்டு இருக்கிறாய் என ,

சுட்டி அலைவரிசை நீ காண , இணைப்பை புதுபிக்க நிற்கும் என்னிடம் "சுட்டிஅலைவரிசை நிச்சயம் வேணும்பா " என அடம்பிடித்த ஒவ்வொரு கெஞ்சலிலும், உன் மிகச்சிறந்த பாசமுள்ள அப்பாவாய் தெரிகிறார் என் தேவா அண்ணா...

எவ்வளவு கொட்டினாலும் ஈடாக முடியாது என்று தெரிந்தும், என் சிறிய நன்றிகள்சமர்ப்பணமாய் இங்கே ..

நீ உருவாகிய அந்த கணத்தில் இருந்து உனக்காய்
ஒவ்வொரு அடியிலும் கவனம் காத்த உன் தாயிற்கு,

விரும்பி உண்ணும் உணவையும் கூட உனக்காய் தவிர்த்து இருக்கும் அந்தஉன்னத உயிர்க்கு,

உனக்காய் தூக்கம் தொலைத்த இரவுகளில், யாருமறியாமல் உன்னோடுஉரையாடிய களைப்பில் உறங்கிய உன் மாதாவிற்கு ..

தோல்களையும், சதைகளையும், எலும்புகளையும் , நரம்புகளையும் தாண்டிஉன்னுடன் முதன் முதல் உணர்வு பரிமாணத்தை கொட்டிய உன் அம்மாவிற்கு ..

நீ ஜனித்த அந்த நொடியில் தன் உடல் காயங்களை மறந்து, உன்னை கைகளில்ஏந்தி புன்னகை சிந்திய ஒப்பற்ற ஜீவனுக்கு...

உன் அழுகையிலும், உன் உடல்நலமின்மை நேரங்களிலும் , உன்ன மறந்து, உலகமே நீ என கிடந்த விலை மதிப்பற்ற மாணிக்கத்திற்கு.....

உன் சிரிப்பிலும், உன் செல்ல பேச்சிலும் தன்னை மறந்து கர்வம் கொண்ட உன்அன்னைக்கு....

நீ தட்டு தடுமாறி நடை பழக முயன்ற தருணத்தின் ஒவ்வொரு தோல்வியிலும், வெற்றிக்காக தனக்குள் பிரார்த்தனை செய்த அந்த தாய்மைக்கு ...

நற்பழக்கங்களை உணவோடு சேர்த்து ஊட்டி வளர்த்து, குட்டி நிலவைமிளிரசெய்து இருக்கும் மிகசிறந்த, விலைமதிப்பற்ற உன் அம்மாவாகியமுதன்மை கடவுள்க்கு...


உன்னை சுமந்த பத்து மாதத்தையும், இனி சுமக்கபோகும் நாட்களையும், பதிவு, கவிதை, தொடர் என்ற மிக நுண்ணிய அணுக்களால் விளக்கிவிட முடியாது, உருவக படுத்திவிட முடியாது,கற்பனை செய்துவிடமுடியாது, உணர்வைபுரிந்துவிட முடியாது ,

உணர்ந்த சிலதுளிகளை இங்கே சிந்தி இருக்கிறேன் எழுத்தாய்........

படிக்க வேண்டிய படிப்புகள் ஏராளம் உன் அம்மாவிடமும், அப்பாவிடமும்...


வாழ்த்துக்கள் என் குட்டி நிலவிற்கும்,நிலவின் அம்மாவிற்கும், நிலவின்அப்பாவிற்கும்(என் தேவா அண்ணா) இந்த நன்னாளில்......


ப்ரியங்களுடன்
விஜய்