Saturday, March 27, 2010

நீ .........





உன் அழகின் மிச்சமே - இவவுலகம் முழுவதும் ....

உன்னை நேசிக்க உரிமை என்றால் -ஒரு நொடி போதும் வாழ்வதற்கு


உன் மௌனச்சிரிப்பில்,வாழ்க்கையை தொலைத்த என் வார்த்தைகள் உன் காதோரம் பாவமாய் ....

                                                                                         
                                             

Friday, March 26, 2010

என் டையரியின் நேற்றைய பக்கம்....






இன்று மாலை நீயும் நானும் மழையில் துள்ளி குதித்து விளையாடினோம் ,
இரவு உண்ணும்போது உன்னிடம் கேட்டேன்,


நான் சிறுவயதில் மழையில் நனைந்து விளையாடும் போதெல்லாம் ,
மழையில் நனையாதே என்பாய், நானோ கோபமாய் திரும்பி பார்த்துவிட்டு
"போடி உன் வேலையை பார்" என்பேன்.
அழுதுகொண்டே ஓடிபோய் விடுவாய், திரும்பி வரமாட்டாய் என்று நினைப்பேன்,
நீயோ உன் அம்மாவிடம் திட்டு வாங்கிக்கொண்டே புதிதாய் வாங்கி வைத்திருக்கும் சேலையை எடுத்து வருவாய்,

எதற்காக என்ற கேள்விகுறியோடு பார்க்கும் என்னிடம் சொல்லாமல் சொல்வாய்,
நீ நனையாமல் இருக்க உன் தலைக்கு மேல் குடைபோல் பிடிக்க என்று,
குதித்து விளையாடும் போது இடையுறாய் வருகிறாய் என்று அடித்து விடுவேன் உன்னை.
பாவமாய், அழுதுகொண்டே மீண்டும் பிடிப்பாய் சேலையை குடைபோல் ..

இன்று நீயே என் மனைவியாய், இன்று மழையில் நனையும்போது ஏன் குடைபிடிக்கவில்லை என்றேன்?.

நீ மழையில் விளையாடிமுடித்து வீடு சென்றதும், நீ கத்தி அழும் சத்தம் கேட்கும், உன் அம்மாவிடம் அடிவாங்கி கொண்டு பாவமாய் உட்கார்ந்து இருப்பாய், உன் விழிநீர்-மழைநீரோடு கலந்து ஓடிக்கொண்டு இருக்கும்,
"காய்ச்சல் வந்தா யார்பாத்துகிறது உன்னை?" என்று, உன் அம்மா உன்னை திட்டும்பொழுதெல்லாம், நான் இருக்கிறேன் என்று கத்தி சொல்லத்தோன்றும்,
நிஜமாய் ஒருவேளை அது காதலாய் இருக்கலாம், தெரியவில்லை, எனக்கு தெரிந்ததெல்லாம் நீ அழகூடாது, சிரித்துகொண்டு இருக்கவேண்டும் என்பது மட்டுமே...

இன்று நீயே என்னுடையவனாய், உன் சிரிப்பை அருகிலிருந்து ரசிக்கிறேன் என்றாய் .

வார்த்தை பேசாமல் முத்தங்களை உன் நேசத்திற்கு பரிசாய் தந்துவிட்டு, உன் மடியில் படுத்து உறங்கிப்போனேன் ,

இன்னும் ஈரமாய் உன் நேசம், என் உடல்முழுவதும் ...



அன்புடன் உன் விஜி
24-பிப்-2010
                                                                                         
                                                                                         

Tuesday, March 16, 2010

என் அக்கா ......




நீ அழகாய் கட்டிய மணல்வீடுகளையும், குச்சிவீடுகளையும் விளையாட்டாய் இடித்தெறியும் என்னை,ராட்சசியாய் மாறி என்முடியை பிடித்து இழுத்து அடித்துவிடுவாய்,
நான் உன்தம்பி அல்லவா,வலித்தாலும் சிரிப்பேன் ,
நீயோ என்னை அடித்துவிட்டு, அழுது கொண்டுபோவாய் நம் அம்மாவிடம்,
அங்கேயும் திட்டே மிஞ்சும் உனக்கு,சின்ன பையனை ஏன் அடித்தாய் என்று,

அன்று உன் அழுகையை பார்த்து ரசித்தேன்..

காலங்கள் கடந்தன, நாட்கள் நகர்ந்தன....
இன்றைய தேதியில் உனக்கு திருமணம் நடந்து பத்து ஆண்டுகள் கடந்து இருக்கும்.
நான் இப்பொழுது பொறியியல் படிப்பை முடித்து
சென்னையில் வேலை தேடிக்கொண்டுஇருக்கிறேன்.

இன்று நானே அழுகிறேன் ஒவ்வொரு நாளும்,
எனக்கு வேலை கிடைக்கவேண்டும் என்று
நீ அழகாய் பார்த்து பார்த்து வளர்த்த உன் முடியை காணிக்கை செய்கிறேன் என்று கடவுளிடம் கைகூப்பி வணங்கிய போது நீ தான் எனக்கு தெரிந்தாய் கடவுளாய்,

எத்தனையோ நாட்கள் உனக்குமுன் பள்ளியில் இருந்து ஓடிவந்து உன் உணவையும் சேர்த்து சாப்பிட்டு இருக்கிறேன்,அன்றெல்லாம் எனக்கு தெரியாது அக்கா, நான் முழுவதையும் நன்றாக உண்ணவேண்டும் என்பதற்காகவே துரத்திக்கொண்டுவந்து இருக்கிறாய் என்று.

வாரத்தில் நான்குநாட்கள் விரதம் இருக்கிறாய் நான் நல்லபடியாக சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று,

மாதத்திற்கு ஒருமுறை முட்டிக்காலில் கோவிலை சுற்றிவருகிறாய், தீ மிதிக்கிறாய், என் பயணங்கள் சரியாக அமைய வேண்டும்என்று..

மாமாவோடும், உன் குழந்தைகளோடும் சந்தோசமாக இருக்க வேண்டிய நேரங்களில் கூட " வேலை கிடைத்துவிடும், நம்பிக்கையாய் இரு, அக்கா நான் உன்னோடு இருக்கிறேன்" என்ற குறுந்தகவல் அனுப்பமறந்ததில்லை,

நல்லா சாப்பிட்டியா?, எதைப்பற்றியும் கவலைப்படாம நன்றாக தூங்கணும், சரியா? என்று அலைபேசியில் நீ பேசும்போது, நான் என்ன சின்னகுழந்தையா என்று, நான் கேட்க தொடங்கும்முன்பே நீ கூறுவாய் எத்தணை வயதானாலும் நீ எனக்கு மூன்று மாதகுழந்தை தான் என்பாய், அப்பொழுதெல்லாம் தொலைபேசியை ஓரமாய் வைத்துவிட்டு தேம்பி தேம்பி அழுது இருக்கிறேன்.

நான் நேர்முகத்தேர்விற்கு செல்லும்பொழுது நண்பர்கள் சொல்வார்கள் "ஆல் தி பெஸ்ட் " என்று, அப்பாவும் ,அம்மாவும் சொல்வாங்க "பாத்து பண்ணு" என்று , நீ மட்டும் தான் சொல்வாய் மறக்காம சாப்பிட்டுட்டு போமா என்று.

நான் உன் அழைப்பை ஏற்க்கவில்லை என்றால் என் நண்பர்களை அழைத்து என்தம்பி எப்படி இருக்கிறான் என்று பதறுகிறாய்,


நான் உன்னோடு தொலைபேசியில் பேசிகொண்டு இருக்கும்பொழுதெல்லாம் நண்பர்கள் கிண்டலடிப்பார்கள் பெண் தோழியுடன் பேசிபழகு அக்காவிடம் பேசுவதை விட்டுவிட்டு என்று சொல்லும் அவர்களுக்கு தெரியாது
எனக்கு முதலும் கடைசியுமான இவ்வுலகின் மிகச்சிறந்த தோழியும் நீ தான் என்று..

உன் வயிற்றில் நான் சுமக்கப்படவில்லை , உன் மார்பில் பால் அருந்தியதில்லை இதை தவிர வேறு வித்தியாசம் காண முடியவில்லை என்னால் உனக்கும், நம் அம்மாவிற்கும்.


இப்பொழுதெல்லாம் நீ அம்மாவாகவே தெரிகிறாய் ,
உன்னை அம்மா என்று தான் அழைக்கிறேன் ...

அம்மா...

                                                                                         
                                             

Wednesday, March 10, 2010

உன் முகப்பரு........




என்னில் உனக்கு என்ன பிடிக்கும் என்றாய்?.,
                                                                                         
உன் முகப்பரு என்றேன்.
                                                                                         
முகப்பருவா என்றாய் ஆச்சர்யமாய்!.,
                                                                                         
ஆம் நீ என்னோடு பேசும்பொழுது எல்லாம் தலைகுனிந்தே பேசிவிட்டு ஓடி செல்கிறாய்,
                                                                                         
உன் முகப்பருக்கள்தானடி சொல்கின்றன, நீ நேற்று வெட்கப்பட்ட நிமிடங்களின் எண்ணிக்கையை....