Wednesday, December 11, 2013

உன் முழுச்சாயல் இல்லாமல் நானெப்படி ?..





அவசர கூலிவேலை நேரத்திலும், என் கன்னம் பிடித்து அழகாய் தலை வாரிவிடுவாய்.உன் சுமை குறைக்க நானே பழகிக்கொண்டேன் தலைவாரிட முதன்முறை அன்று. நீ சமத்து என்பாய் என நினைத்து காட்டினேன் உன்னிடம்.

ஏதும் பேசாமல் வேலைக்கு சென்று வருகிறேன் என்று கை அசைத்தபொழுது கவனித்தேன் உன் கலங்கிய கண்களை. மறுநாள் என் தலை வாரும் உன்னிடம் 'நான் தலைவாரின எனக்கு பிடிக்கலம்மா' என சொல்லிக்கொண்டே உன் முகம் காண்கிறேன்.புன்னகையுடன் சிறு கர்வம் கொண்டாய் "என்னைவிட யார் உன்னை பார்த்துக்கொள்ள முடியும்" என்று. உன் உதிரம் அல்லவா நான்,உன் முழுச்சாயல் இல்லாமல் நானெப்படி ?..

0 comments:

Post a Comment